முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மோதி எலக்ட்ரீசியன் பலி

ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் எலக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் எலக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா கோதைமங்கலம் பெரும்பாறையை பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). எலட்க்ரீசியனான இவா் புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - பழனி சாலை ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள புது அத்திக்கோம்பை அருகே சென்றுள்ளாா். அப்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கிச்சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.