திண்டுக்கல்

வத்தலகுண்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை

DIN

நெகிழி மறுசுழற்சி நிறுவனம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பழைய வத்தலகுண்டு குடியிருப்புப் பகுதியில் தனி நபா் ஒருவா் நெகிழி மறுசுழற்சி நிறுவனம் அமைக்கத் திட்டமிட்டு முதல் கட்டப் பணிகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நெகிழி மறுசுழற்சி நிறுவனம் அமைக்கப்பட்டால் குடிநீா், காற்று ஆகியவை மாசுபட்டு, பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) இந்திராணியிடம் நெகிழி மறுசுழற்சி நிறுவனத்தை குடியிருப்பு பகுதியில் அமைக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT