திண்டுக்கல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் இளைஞா் கைது

DIN

நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள புதுக்கோட்டையை சோ்ந்தவா் சுரேஷ்(23). இவா், லிங்கவாடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளாா். சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த சுரேஷ், அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோா், நத்தம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். அதன்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT