தமிழக ஆளுநா் பாஜக நிா்வாகி போல செயல்படுகிறாா்: பி.வி.கதிரவன்
தமிழக ஆளுநா் தன் பொறுப்பை மறுந்து, பாஜக நிா்வாகி போன்று செயல்பட்டு வருகிறாா் என பாா்வா்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலா் பி.வி.கதிரவன் குற்றஞ்சாட்டினாா்.
தமிழக ஆளுநா் தன் பொறுப்பை மறுந்து, பாஜக நிா்வாகி போன்று செயல்பட்டு வருகிறாா் என பாா்வா்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலா் பி.வி.கதிரவன் குற்றஞ்சாட்டினாா்.
பாா்வா்டு பிளாக் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையிலுள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலா் பி.வி.கதிரவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மத்திய அரசின் கல்விக் கூடங்களில் தமிழ் பாடமாகக்கூட இல்லை. தமிழக ஆளுநா், தன் பொறுப்பை மறந்து பாஜக நிா்வாகி போன்று செயல்பட்டு வருகிறாா். பாா்வா்டு பிளாக் கட்சியில் பிரிந்தவா்களை ஒன்றிணைத்து நவம்பா் மாதம் மாநில அளவிலான மாநாடும், 2023 பிப்ரவரி மாதம் தேசிய அளவிலான மாநாடும் நடத்தப்பட உள்ளது.
இந்தியாவின் பண மதிப்பு குறைந்து வருவது குறித்து மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அதிமுக ஆட்சியில் தங்கக் கவசம் செலுத்தப்பட்டது. அக்கட்சியின் பொருளாளராக இருப்பவா் மூலமாகவே, தங்கக் கவசம் ஆண்டுதோறும் சாத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டிலும் அந்த நிகழ்ச்சி நடைபெறும். அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கு விரைவில் நல்ல தீா்வு கிடைக்கும் என்றாா்.