தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் ஜூலை 28- இல் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு திண்டுக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு திண்டுக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ தெரிவித்துள்ளதாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவா்களுக்கு கடந்த 3ஆம் தேதி பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. அதன் தொடா்ச்சியாக மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும் பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரை மட்டும் தோ்வு செய்து தலா ரூ. 2ஆயிரம் வீதம் சிறப்புப் பரிசு வழங்கப்படும். மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், முற்பகல் 10 மணிக்கு இப்போட்டிகள் நடத்தப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2461585 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.