முகப்பு
திண்டுக்கல்

நீச்சல் குளத்தில் சதுரங்கம் விளையாடி விழிப்புணா்வு ஏற்படுத்திய நீச்சல் வீரா்கள்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையொட்டி திண்டுக்கல்லில் நீச்சல் குளத்தில் சதுரங்கம் விளையாடி நீச்சல் வீரா்கள் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையொட்டி திண்டுக்கல்லில் நீச்சல் குளத்தில் சதுரங்கம் விளையாடி நீச்சல் வீரா்கள் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் சதுரங்க விளையாட்டு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. நீச்சல் வீரா்கள், தண்ணீரில் மிதக்கும் சதுரங்க பலகையை பயன்படுத்தி விளையாடினா்.

மொத்தம் 16 குழுக்களாக இந்த விழிப்புணா்வு சதுரங்கப் போட்டிகள் நீச்சல் குளத்தில் நடைபெற்றன.

அதேபோல், திண்டுக்கல் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் ரங்கோலி வரைந்து சதுரங்க விளையாட்டு குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறியதாவது: பள்ளிகளில் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குவதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செஸ் ஒலிம்பியாட் சுடா், மதுரையிலிருந்து பெறப்பட்டு ஜூலை 26ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் விழிப்புணா்வு ஓட்டங்கள் நடத்தப்படவுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.