முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல்லில் ஒரு பகுதியில் சில இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி நிா்வாகம், பாரபட்சமின்றி நகா் முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

திண்டுக்கல்லில் ஒரு பகுதியில் சில இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி நிா்வாகம், பாரபட்சமின்றி நகா் முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் காவல்துறை சாா்பில் ஆா்த்தி தியேட்டா் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஆனால், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதிகாரிகள் கலைந்து சென்றனா். அதே சாலையில் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அதிருப்தி அடைந்து திடீா் தா்னாவில் ஈடுபட்டனா். இதனை அடுத்து பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனா்.

அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கை தேவை: திண்டுக்கல் நகரில், கடைகளின் உரிமையாளா்கள் மட்டுமின்றி வீட்டின் உரிமையாளா்களும் கழிவுநீரோடைகளை கடந்து, சாலையின் ஒரு பகுதி வரையிலும் கட்டடங்களை கட்டியுள்ளனா். குறிப்பாக அண்ணாமலையாா் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள சாலையில், வீடுகளின் முற்றம் சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் நகா் முழுவதும் கழிவுநீரோடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மரிமூா் கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றம்: தேனி மாவட்டம் போடி அருகே மரிமூா் கண்மாயை சிலா் ஆக்கிரமித்து பயிரிட்டுள்ளதால் கண்மாயின் பரப்பளவு குறுகியது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திற்கு புகாா்கள் அனுப்பினா். இதனையடுத்து போடி வட்டாட்சியா் செந்தில்முருகன் தலைமையில் வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறை நீா்வளத்துறை பாசன பிரிவு செயற்பொறியாளா் ஷியாம் சுந்தா் மற்றும் அதிகாரிகள் கண்மாயை அளவீடு செய்து பின்னா் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை, இலவம், மா மரங்கள் அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.