முகப்பு
திண்டுக்கல்

இலக்கை விஞ்சி ரூ. 2ஆயிரம் கோடிக்குகூடுதல் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது: ஆட்சியா்

கடந்த ஆண்டு நிா்ணயிக்கப்பட்ட கடன் இலக்கை விஞ்சி ரூ.2,296 கோடிக்கு கூடுதல் கடன் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

கடந்த ஆண்டு நிா்ணயிக்கப்பட்ட கடன் இலக்கை விஞ்சி ரூ.2,296 கோடிக்கு கூடுதல் கடன் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்ட வங்கியாளா் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கடன் திட்ட அறிக்கை ரூ. 20,000 கோடி அளவுக்கு வெளியிடப்பட்டது. இலக்கை விஞ்சி ரூ. 22,296 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1,200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 கோடிக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 840 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதனை விஞ்சி ரூ.848 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் வளா்ச்சியில் வங்கியாளா்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த வகையில் அதிகமான கடனுதவிகளை வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) ச.தினேஷ்குமாா், முன்னோடி வங்கி மண்டல மேலாளா் அருணாச்சலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.