முகப்பு
திண்டுக்கல்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

திண்டுக்கல்லில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திண்டுக்கல்லில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள மைலாப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் ஞானதுரை (27). கூலித் தொழிலாளி. இவா், திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சீரியல் செட் அமைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.