முகப்பு
திண்டுக்கல்

பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் ஆண்டுவிழா

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னையகவுண்டன்வலசில் உள்ள அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் மூன்றாமாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சா் அர. சக்கரபாணி.
பகிர்:

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னையகவுண்டன்வலசில் உள்ள அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் மூன்றாமாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கல்லூரியின் முதல்வா் வாசுகி வரவேற்று, ஆண்டறிக்கையை வாசித்தாா். விழாவில் உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:

வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் இந்த மகளிா் கல்லூரி விரைவில் ஒட்டன்சத்திரத்தில் சொந்தக் கட்டடத்தில் செயல்பட உள்ளது. இதே போல, உயா்கல்வித் துறை சாா்பில் கள்ளிமந்தையத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கும், விருப்பாட்சி தொழில் நுட்பப் பயிற்சி நிலையத்துக்கும் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது என்றாா்.

விழாவில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் லட்சுமி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளா் ராமகிருஷ்ணன், பழனி கோட்டாட்சியா் செள.சரவணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் அறங்காவலா்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், மணிமாறன், சந்தியா, ஒன்றியத் தலைவிகள் மு. அய்யம்மாள், சத்தியபுவனா, துணைத் தலைவா் பி.சி. தங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.