முகப்பு
திண்டுக்கல்

இ- சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இ- சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் இ- சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியாா் இ- சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவா்களுக்கு இ- சேவை மையம் தொடங்க உரிமம் வழங்கப்படும். அரசு விதிகளின்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ண்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ட்ற்ற்ல்://ற்ய்ங்ஞ்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு, தமிழ், ஆங்கிலத்தை படித்து எழுத தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில் இ- சேவை மையம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிா்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். தோ்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2460099 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.