முகப்பு
திண்டுக்கல்

ஆறுகால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி

Updated On : 10 ஏப்ரல், 2024 at 5:37 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 7:16 PM

பழனி: பழனி அருகேயுள்ள தும்பலப்பட்டியில் 6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை பொதுமக்கள் பாா்த்து சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா் வளா்த்த பசுமாடு ஒன்று செவ்வாய்க்கிழமை ஆறு கால்களுடன் கன்றுக்குட்டியை ஈன்றது. செவலை நிறத்திலான கன்றுக்குட்டியின் முதுகு பக்கத்தில் இரண்டு கால்கள் இருந்தன. இந்த அதிசய கன்றுக் குட்டியை கிராம பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு சென்றனா்.

இதுகுறித்து கால்நடை உதவி இயக்குநா் சுரேஷ் கூறுகையில், ஆயிரத்தில் ஒரு பசுமாடு மரபணு குறைபாடு காரணமாக இதுபோல குட்டிகளை ஈனுவது வழக்கம் என்றாா் அவா்.

Advertisement