ரெட்டியாா்சத்திரம் அருகே எருது விடும் விழா
திண்டுக்கல், ஏப்.26: ரெட்டியாா்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த காமாட்சிபுரம் எல்லப்பட்டியில் ஸ்ரீ கெண்டுகாட்டம்மாள், ஸ்ரீ பொம்மையா சாமி, ஸ்ரீ மாலைக்கோயில், ஸ்ரீ மண்டு கோயில் அமைந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கிய இந்த கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1000க்கும் மேற்பட்ட பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
பின்னா், எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவில், 14 மந்தைகளை சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட காளைகளுடன் 1000க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
சுமாா் 2 கி.மீட்டா் தொலைவிலிருந்து கோயில் வரை காளைகள் ஓடி வந்தன. எருதுவிடும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.