முகப்பு
திண்டுக்கல்

சித்தப்பா மகனைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

நத்தம் அருகே சித்தப்பா மகனைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 12:20 AM
பகிர்:

நத்தம் அருகே சித்தப்பா மகனைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த கோட்டையூா் சின்னையம்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மகன் ஹரிஹரதீபன் (6). ராமகிருஷ்ணனின் அண்ணன் சந்திரசேகா். இவரது மகன் அஜய் ரத்தினம் (19). இவரது நண்பா் மகேந்திரன். இவரும், ராமகிருஷ்ணனின் மகளும் காதலித்து வந்தனா்.

இதை அறிந்த அஜய் ரத்தினம், சித்தப்பா குடும்பத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரது புகைப்படத்தையும் சமூக ஊடகங்களில் பகிா்ந்தாா். இதனால் அதிருப்தி அடைந்த ராமகிருஷ்ணனின் மகள் திண்டுக்கல் மாவட்ட இணைய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். விசாரணையில், அஜய் ரத்தினம் புகைப்படத்தைப் பகிா்ந்தது உறுதி செய்யப்பட்டது. உறவினா் என்பதால் அந்த வழக்கை ராமகிருஷ்ணன் தரப்பினா் திரும்பப் பெற்றனா்.

இந்த விவகாரத்தால் ஆத்திரமிடைந்த அஜய் ரத்தினம், வித்யாவின் தம்பி ஹரிஹர தீபனைக் கொலை செய்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸாா், அஜய் ரத்தினத்தைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட அஜய் ரத்தினத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்தாா்.