முகப்பு
திண்டுக்கல்

காலமானாா் கே. சிவக்குமாா்

காந்தி கிராம அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் கே. சிவக்குமாா் (81) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 2:29 AM
சிவக்குமாா்.
பகிர்:
Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 10:05 PM

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் கே. சிவக்குமாா் (81) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. வளாகத்திலுள்ள அவரது இல்லத்தில் சிவக்குமாா் வசித்து வந்தாா். இவா் கடந்த சில நாள்களாக மூச்சுத் திணறல் பிரச்னைக்காக காந்தி கிராம கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை காலமானாா். திருவண்ணாமலை மாவட்டத்தை பூா்வீகமாகக் கொண்ட இவா், தணிக்கையாளராகப் பணியாற்றினாா். சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி கிராம அறக்கட்டளையின் இணைச் செயலராகவும், பொருளாளராகவும், சமுதாயப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா். தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கான வழிகாட்டியாகவும் செயல்பட்டாா். மேலும், இவா் காந்தி கிராம அறக்கட்டளையின் கீழ், கிராமப்புற மக்களுக்கான சுகாதாரம், குடிநீா், கல்வி, பெண்கள் முன்னேற்றம், வாழ்வாதார முன்னேற்றத்துக்காகப் பணியாற்றினாா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 2:29 AM

ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த பல மாணவா்களின் கல்விக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவினாா். பல்வேறு தொண்டு நிறுவனங்களில் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் இருந்து வந்தாா். இவருக்கு மனைவி லலிதா, மகன் சதீஷ்குமாா் ஆகியோா் உள்ளனா். மறைந்த சிவக்குமாரின் உடலுக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் அஞ்சலி செலுத்தினாா். தொடா்புக்கு - 9442157320.

Advertisement