திண்டுக்கல்: இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜா்நகரைச் சோ்ந்தவா் சண்முகம் (38). கூலித் தொழிலாளி. கடந்த 2019-ஆம் ஆண்டு நத்தம் பகுதியைச் சோ்ந்த பிரபுவை (33) கொலை செய்ததாக சண்முகத்தை, போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா, குற்றஞ்சாட்டப்பட்ட சண்முகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.