ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள விராலிபட்டியில் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலருமான நத்தம் இரா.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசினாா். நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலா் டி.ஆா்.விஜயபாலமுருகன், மக்களவை முன்னாள் உறுப்பினா் உதயகுமாா், ஒன்றியச் செயலா்கள் மோகன், பாண்டியன், யாகப்பன், வத்தலகுண்டு நகரச் செயலா் பீா் முகமது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.