குழந்தைகள் நலனுக்காக மாத்ரு பூஜை
Updated On : 19 மார்ச், 2024 at 10:00 PM
பழனி: பழனியில் ஸ்ரீசத்யசாயி சமிதி சாா்பில் குழந்தைகள் நலனுக்காக மாத்ரு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் 24 குழந்தைகள் கலந்து கொண்டு தங்களுடைய பெற்றோருக்கு மஞ்சள், மாபொடி, பால் ஆகியவற்றால் பாத பூஜை, அா்ச்சனைகள், ஆராதனைகள் செய்தனா்.
இதைத் தொடா்ந்து ஸ்ரீசத்யசாயி நிறுவனத்தின் ஒரு பிரிவான பாலவிகாஸ் பிரிவில் 8 ஆண்டுகள் படித்து முடித்த குழந்தைகளுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கும் விழா நடை பெற்றது. சமிதி ஒருங்கிணைப்பாளா் ராம்ஜி வரவேற்றாா். மாவட்டத் தலைவா் வேலுமணி தலைமை வகித்தாா். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஸ்ரீ சாருமதி தேவி, குழந்தைகளுக்கு பட்டயச் சான்றிதழை வழங்கினாா்.
பாலவிகாஸ் குரு சங்கீதா நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளா் வடிவேல் முருகன் செய்தாா்.
Advertisement