முகப்பு
திண்டுக்கல்

திமுக, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய மாா்க்சிஸ்ட் வேட்பாளா்

Updated On : 20 மார்ச், 2024 at 4:35 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 8:13 PM

பழனி: திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் சச்சிதானந்தம், பழனியில் திமுக, காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சச்சிதானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறாா். செவ்வாய்க்கிழமை பழனிக்கு வந்த சச்சிதானந்தம், திமுக நகர நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

பின்னா் சச்சிதானந்தம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

பழனியில் மலை அடிவாரத்தில் சாலையோர வியாபாரிகள் வெளியேற்றப்பட்டதால் அவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை நாடி சட்டப்படியும், அதிகாரிகளை வலியுறுத்தியும் சாலையோர வியாபாரிகள் தொழில் செய்வதற்கு வசதியை செய்து கொடுப்பேன் என்றாா் அவா்.

திமுக நகரச் செயலா் வேலுமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜமாணிக்கம், நகரச் செயலரும், நகா்மன்ற துணைத் தலைவருமான கந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா். இதைத்தொடா்ந்து காங்கிரஸ் கட்சி சாா்பில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வேட்பாளா் சச்சிதானந்தம், அந்தக் கட்சியின் நிா்வாகிகளிடமும் ஆதரவு திரட்டினாா். இதில் நகரச் செயலா் முருகானந்தம், ஒன்றியச் செயலா் முத்துவிஜயன், மாசிலாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.