முகப்பு
திண்டுக்கல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

Updated On : 13 மே, 2024 at 5:30 PM
பகிர்:

திண்டுக்கல்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திண்டுக்கல மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள வேல்வாா்கோட்டையைச் சோ்ந்தவா் தினேஷ் ( 27). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு , 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, வடமதுரை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து தினேஷைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண் குற்றம்சாட்டப்பட்ட தினேசுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.