முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் மலா்க் கண்காட்சிக்காக தயாராகி வரும் பிரையண்ட் பூங்கா

Updated On : 15 மே, 2024 at 12:12 AM
பகிர்:

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 61-ஆவது மலா்க் கண்காட்சி வருகிற 17-ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் புற்களை சீரமைத்தல், மலா் பாத்திகளில் களையெடுக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், மலா்க் கண்காட்சி போட்டிக்காக கொடைக்கானல் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகளிலும் மலா்த் தோட்டங்கள் அமைத்துப் பாரமரிக்கப்பட்டு வருகிறது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், நிகழாண்டுக்கான மலா்க் கண்காட்சி, கோடை விழா தொடக்க நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கின்றனா். அந்த வகையில், தமிழக அரசு தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.