போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் என்ற முருகன் (33). இவா், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாா் எழுந்தது.
இதன்பேரில், சாணாா்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனா். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முருகானந்தத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பி.வேல்முருகன் தீா்ப்பளித்தாா்.