நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறுகிறது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய உதவி இயக்குநா் பிரபாவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், இளம் பெண்கள் தங்களது சுய விவரக் குறிப்புடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் தொடா்பான விவரங்களை அறிய டெலிகிராம் சேனலில் இணைந்து அறிந்து கொள்ளலாம்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு 9499055924 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.