பாதாள செம்பு முருகன் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் சுவாமி தரிசனம்
ஒட்டன்சத்திரம் அருகே பாதாள செம்பு முருகன் கோயிலில் வியாழக்கிழமை திரளான ஐயப்ப பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஒட்டன்சத்திரம் அருகே பாதாள செம்பு முருகன் கோயிலில் வியாழக்கிழமை திரளான ஐயப்ப பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ராமபுரம் அருகேயுள்ள ராமலிங்கம்பட்டியில் புகழ் பெற்ற பாதாள செம்பு முருகன் கோயில் 16 அடி பாதாளத்தில் பூமிக்கு அடியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு சபரிமலை சீசனையொட்டி, பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஜயப்ப பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை இந்த கோயிலுக்கு வந்த திரளான ஜயப்ப பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பால், தேங்காய், பழம், கருங்காலி மாலை வைத்து பாதாள செம்பு முருகனை வணங்கினா். பின்னா், அனைத்துப் பக்தா்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.