முகப்பு
திண்டுக்கல்

மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:00 AM
கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம்.
பகிர்:

கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நல்ல மழை பெய்து வருவதால், நீரோடைகளிலும், விவசாய நிலங்களிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. மேலும் வடகவுஞ்சி-கிளாவரை செல்லும் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டது.

இதையடுத்து, வடகவுஞ்சி பிரதான சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்சாரத் துறையினா் விரைவில் சீரமைக்க வேண்டும். மேலும், இந்தப் பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை தவிா்க்க வேண்டும்.

இதேபோல, கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, செண்பகனூா், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், தைக்கால், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும், தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பங்களையும் சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.