திண்டுக்கல்

பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.11) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பழனியை அடுத்த பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.11) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பழனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழனி கோட்டத்துக்கு உள்பட்ட பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூா், தாதநாயக்கன்பட்டி, கரடிகூட்டம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதேபோல, பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம்புதூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து

இனாம்ராமநாதபுரம் விலக்கில் பேருந்து நிறுத்தம் செய்ய வலியுறுத்தல்

6-ஆவது சுற்று: வின்சென்ட்டுடன் டிரா செய்த அா்ஜுன்

ஆக.15-இல் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT