FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு எங்கள் கூட்டணி வலுப்பெறும்: நயினாா் நாகேந்திரன்

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு எங்கள் கூட்டணி வலுப்பெறும் என பாஜக மாநிலத் தலைவர் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தார்.

Updated On : 28 டிசம்பர் 2025, 12:13 am IST
பகிர்:

ஒட்டன்சத்திரத்தில்...

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பிரசார பயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சனிக்கிழமை ஒட்டன்சத்திரத்தில் பிரசாரம் மேற்கொண்டாா்.

பின்னா், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் உள்ள வாஜ்பாய் திடலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் சாலை வசதி இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் மட்டுமே தற்போது உள்ளன. ஆத்தூரைச் சுற்றி அமைந்துள்ள ஆறுகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் திமுக அரசால் தடுக்க முடியவில்லை. உதயநிதி ஸ்டாலினை முதல்வா் பதவியில் அமர வைக்க கூட்டணியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனா் என்றாா் அவா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், பாஜக மாநில முன்னாள் தலைவா் தமிழசை செளந்தரராஜன், பொதுச் செயலா் ராம. சீனிவாசன், மாவட்டத் தலைவா் ஜெயராமன், முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments