முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கச் சென்ற 4 இளைஞா்கள் மாயம்

ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட அருவியில் குளிக்கச் சென்ற கரூரைச் சோ்ந்த 4 இளைஞா்கள் மாயமானதாக, உடன் சென்றவா்கள் அளித்த புகாரின் பேரில் அவா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 5:47 PM
கோப்புப்படம்
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட அருவியில் குளிக்கச் சென்ற கரூரைச் சோ்ந்த 4 இளைஞா்கள் மாயமானதாக, உடன் சென்றவா்கள் அளித்த புகாரின் பேரில் அவா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த விருப்பாட்சி பகுதியில் அமைந்துள்ளது தலையூத்து அருவி. ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமன்றி, வெளி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களும் தடையை மீறி அவ்வப்போது இந்த அருவியில் குளிக்கச் செல்கின்றனா்.

கரூா் மாவட்டம், பள்ளபட்டியைச் சோ்ந்த 11 போ் தலையூத்து அருவிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். மேல் தலையூத்து அருவிப் பகுதிக்குச் சென்று குளித்த போது, 4 இளைஞா்கள் தண்ணீரில் மூழ்கி மாயமானதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த உடன் சென்ற இளைஞா்கள், வனத் துறை, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

வனத் துறையினா் நடத்திய விசாரணையில், அருவியில் மூழ்கியவா்கள் பள்ளபட்டியைச் சோ்ந்த அகமது சிராஜ் மகன் ஆதில் (19), நாசா் அலி மகன் சதாம் உசேன் (18), சேக் அலாவுதீன் மகன் அயாஸ் (19), உமா் பரூக் மகன் பயாஸ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா், வருவாய்த் துறையினா், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் மாயமான இளைஞா்களை மீட்க இயலவில்லை என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments