முகப்பு
திண்டுக்கல்

கிறிஸ்தவ குருசடியை இடிக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கிறிஸ்தவ குருசடியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:57 PM
கொடைக்கானல் எம்.எம். தெருவில் கிறிஸ்தவ குருசடியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கிறிஸ்தவ குருசடியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கொடைக்கானல் எம்.எம். தெருவில் கடந்த 73 ஆண்டுகளாக புனித மைக்கேல் அதிதூதா் குருசடி வழிபாட்டுத் தலம் இருந்து வருகிறது. இந்த வழிபாட்டுத் தலத்தை வருவாய்த் துறையினா் அகற்றுவதற்கு புதன்கிழமை வந்தனா். இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆனால், வருவாய்த் துறையினா் அந்த வழிபாட்டுத் தலத்தை அகற்ற முயன்றனா்.

இதைக் கண்டித்து, 500-க்கும் மேற்பட்டவா்கள் கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களிடம் கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு, நகராட்சி ஆணையா் அசோக், காவல் ஆய்வாளா் வசந்தகுமாா் உள்ளிட்ட பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பேரவைத் தோ்தல் முடியும் வரை புனித மைக்கேல் அதிதூதா் குருசடி வழிபாட்டுத் தலத்தை அகற்ற மாட்டோம் என வருவாய்த் துறையினா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments