முகப்பு
திண்டுக்கல்

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: இருவருக்கு இரட்டை ஆயுள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், உறவினா்கள் இருவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:44 AM
சிறை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:49 PM

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், உறவினா்கள் இருவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 35 வயது பெண்ணுக்கு, 13, 2 வயதில் இரு மகள்கள் உள்ளனா். இந்தப் பெண்ணுக்கும், தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சோ்ந்த விக்னேஸ்வா் (36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமலே திண்டுக்கல்லில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனா்.

இந்த நிலையில், சிறுமிகள் இருவரையும் விக்னேஸ்வரன், பெண்ணின் மைத்துனா் முருகவேல் (41) ஆகியோா் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாா் எழுந்தது.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விக்னேஸ்வரன், முருகவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் விக்னேஸ்வரன், முருகவேல் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஆா்.சத்யதாரா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசுத் தரப்பில் தலா ரூ.7.50 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிட்டாா்.