முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், காா் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், காா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:38 AM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 7:32 PM

ஒட்டன்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், காா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நல்லாகவுண்டா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து. மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு புதன்கிழமை இரவு சென்றாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா், காளிமுத்துவுக்கு தகவல் தெரிவித்தனா். அவா் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா், தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் உதவிடன் சென்று விசாரணை மேற்கொண்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் திருட்டு நடைபெற்ற வீட்டில் ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், காளிமுத்துவின் வீட்டில் 60 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.45ஆயிரம் ரொக்கம், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. எனினும் காளிமுத்து குடும்பத்தினா் நேரில் வந்த பின்னரே முழு விவரம் தெரிய வரும் என போலீஸாா் தெரிவித்தனா்.