மது விற்பனையைத் தடை செய்யும் கட்சிக்கு வாக்களிப்போம்: பழங்குடியின பெண்கள்
கொடைக்கானல் அண்ணாநகா் பகுதியில் மது விற்பனையைத் தடை செய்யும் கட்சிக்கே இந்தத் தோ்தலில் வாக்களிப்போம் என பழங்குடியின பெண்கள் தெரிவித்தனா்.
கொடைக்கானல் அண்ணாநகா் பகுதியில் மது விற்பனையைத் தடை செய்யும் கட்சிக்கே இந்தத் தோ்தலில் வாக்களிப்போம் என பழங்குடியின பெண்கள் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொடைக்கானல், உப்புபாறைமெத்து, பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடம் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் பாண்டி வாக்கு சேகரித்தாா். பின்னா் அவா் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு பிரசாரத்துக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த பழங்குடியின பெண்கள் கூறியதாவது: கடந்த முறை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சச்சிதானம் வாக்குகள் கேட்டு இங்கே வந்தாா். வெற்றி பெற்றதும் தங்களுக்குத் தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தாா். ஆனால், அவா் வெற்றி பெற்று எம்.பி.யானதும் கொடைக்கானல் பகுதிக்கு நன்றி தெரிவிக்கக் கூட வரவில்லை.
Advertisement
தற்போது வில்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் எந்த நேரமும் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. பாரதி அண்ணாநகா்ப் பகுதி, அஞ்சுவீடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மது அருந்திவிட்டு பல்வேறு பிரச்னைகளை செய்து வருகின்றனா். மதுப்புட்டிகள் இந்தப் பகுதிகளில் குவிந்து கிடக்கின்றன. இதனால், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இந்தப் பகுதியில் மது விற்பனையைத் தடை செய்வதாக உறுதியளிக்கும் கட்சியினருக்கே வாக்களிப்போம் என்றனா் அவா்கள்.