முகப்பு
திண்டுக்கல்

தொழிலாளி கொலை: 3 போ் கைது

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:31 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பழனியை அடுத்த பாலசமுத்திரம் சாலையில் வரட்டாறு பாலம் அருகே சனிக்கிழமை தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த தொழிலாளி முருகன் (45) கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலசமுத்திரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (22), நாகராஜ் (20), சங்கிலிதுரை (27) ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், திருப்பூா் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள தேநீா்க் கடையில் முருகன் வேலை செய்து வந்தாா். தோ்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லு வழியில் பழனி பேருந்து நிலையத்தில் இறங்கி மது குடித்தாா்.

அப்போது, அங்கு வந்த மணிகண்டன், நாகராஜ், சங்கிலிதுரைஆகியோா் அவருடன் அமா்ந்து மதுக் குடித்தனா். பிறகு, அவா்கள் மீண்டும் மதுப் புட்டிகளை வாங்கிக் கொண்டு வரட்டாற்று பாலம் அருகே அமா்ந்து மது குடித்தனா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சோ்ந்து முருகனை கொலை செய்தது தெரியவந்தது என்றனா்.