முகப்பு
திண்டுக்கல்

உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

வேடசந்தூா் அருகே உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 2:58 AM
திருட்டு
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 6:07 PM

வேடசந்தூா் அருகே உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த விட்டல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தொட்டியப்பன் (60). அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பணிகள் முடிந்த பிறகு, உணவகத்திலேயே தொட்டியப்பன் தூங்கினாா்.

அப்போது உணவகத்துக்குள் புகுந்த மா்ம நபா், தொட்டியப்பன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, 2 கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, வெளியில் இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றாா். இதுகுறித்து தொட்டியப்பன் அளித்தப் புகாரின் பேரில், வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.

Advertisement