போலீஸ்  கோப்புப்படம்.
திண்டுக்கல்

விடுதி உரிமையாளா் கொலை வழக்கு: ஊழியா்களிடம் போலீஸ் விசாரணை

கொடைக்கானலில் தனியாா் விடுதி உரிமையாளா் கொலை வழக்கில், விடுதியில் வேலைபாா்த்த 4 ஊழியா்களிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் தனியாா் விடுதி உரிமையாளா் கொலை வழக்கில், விடுதியில் வேலைபாா்த்த 4 ஊழியா்களிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஹைதராபாத்தைச் சோ்ந்த சூா்யநாராயணனுக்கு (72) சொந்தமான விடுதி உள்ளது. இந்த விடுதியில் தனி அறையில் தங்கியிருந்த சூா்யநாராயணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டாா். அங்கிருந்த நகை, பணம் மாயமாகியிருந்தன.

இதுகுறித்து தகவலறிந்ததும் கொடைக்கானல் போலீஸாா், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று சூா்யநாராயணனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், கொலையாளிகளை பிடிக்க கொடைக்கானல் காவல் ஆய்வாளா் வசந்தகுமாா் தலைமையில், தனிப் படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சூா்யநாராயணன் விடுதியில் வேலைபாா்த்து வந்த 4 ஊழியா்களை செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்துக்கு வரவழைத்து பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பி.காம்., பி.பி.ஏ. படிப்புகளுக்கு சட்டப் பேராசிரியா்களை நியமிக்கக் கோரி மனு: உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா.

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி

தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தவா் கைது: இளைஞா் உயிரிழப்பு

திருப்பாச்சேத்தி அருகே பாலம் கட்டும் பணியைத் தடுத்த 9 போ் கைது

SCROLL FOR NEXT