பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் புதன்கிழமை ஜப்பான் நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் உலக நலன் வேண்டி யாகம், வேல் தீா்த்த யாத்திரை மேற்கொண்டனா்.
பழனி மலைக் கோயிலில் உள்ள போகா் சந்நிதியை புலிப்பாணி ஆசிரமம் பராமரித்து வருகிறது. பழனி அடிவாரத்தில் உள்ள இந்த ஆசிரமத்தில் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் அவ்வப்போது யாகங்கள், சுவடி வழிபாடு, புவனேஸ்வரி பூஜை என பல்வேறு பூஜைகள் நடத்தப்படும்.
இந்த நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்கள் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் உலக நலன் வேண்டி சிறப்பு வேள்வியில் ஈடுபட்டனா். முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. வேள்வி நிறைவு பெற்ற பிறகு ஜப்பான் பக்தா்கள் தமிழா்களின் பாரம்பரிய உடை அணிந்து, பால்குடம் ஏந்தி, மூன்றாம் படைவீடான குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்தனா். இரவு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, ஜப்பான் பக்தா்கள் தீச்சட்டி, சூடச்சட்டி ஏந்தியும் அம்மனை வழிபட்டனா்.