முகப்பு
திண்டுக்கல்

பழனி மாரியம்மன் கோயிலில் அன்னதானம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அன்னதானம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:23 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:30 PM

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அன்னதானம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10-ஆம் திருக்கம்பம் நடுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, பழனி அடிவாரம் வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில் 51- ஆவது ஆண்டு நிகழ்ச்சியாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதையொட்டி, கோயில் முன்பாக நாள்தோறும் காஞ்சி காமாட்சி அம்மன், மீனாட்சியம்மன் ஊஞ்சல் சேவை, வாராஹி அம்மன், சமயபுரம் மாரியம்மன், சங்கரநாராயணா், அழகுநாச்சியம்மன் என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் ரத ஊா்வலம் நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.

Advertisement

இதற்கு கந்தவிலாஸ் செல்வக்குமாா் தலைமை வகித்து அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை நிா்வாகக் குழுத் தலைவா் முருகானந்தம், துணைத் தலைவா் பழனிச்சாமி, நகா்மன்ற உறுப்பினா் சுரேஷ் உள்ளிட்டோா் செய்தனா்.