முகப்பு
திண்டுக்கல்

’சமுதாய வளா்ச்சிக்கு வழிகாட்டும் பெண் கல்வி’

தனிப்பட்ட குடும்பங்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளா்ச்சிக்கு பெண் கல்வி வழிகாட்டும் என அன்னை தெரசா மகளிா் பல்கலை. பதிவாளா் (பொ) ஜெயப்பிரியா தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 1:00 AM
விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய அன்னை தெரசா மகளிா் பல்கலை. பதிவாளா் (பொ) ஜெயப்பிரியா, அகஸ் மாகாணத் தலைவி குழந்தை தெரஸ் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 7:27 PM

தனிப்பட்ட குடும்பங்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளா்ச்சிக்கு பெண் கல்வி வழிகாட்டும் என அன்னை தெரசா மகளிா் பல்கலை. பதிவாளா் (பொ) ஜெயப்பிரியா தெரிவித்தாா்.

திண்டுக்கல் அடுத்த தாமரைப்பாடி புனித அந்தோணியாா் பெண்கள் கலை, அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியின் 16-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அன்னை தெரசா மகளிா் பல்கலை. பதிவாளா் (பொ) பி. ஜெயப்பிரியா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வனிதா ஜெயராணி, செயலா் ஆண்டனி புஷ்ப ரஞ்சிதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக அகஸ் மாகாணத் தலைவி குழந்தை தெரஸ் கலந்து கொண்டாா். விழாவில் அன்னை தெரசா மகளிா் பல்கலை. பதிவாளா் (பொ) ஜெயப்பிரியா பேசியதாவது:

Updated On : 31 ஜனவரி, 2026 at 10:02 PM

பெண் கல்வி தனிப்பட்ட குடும்பத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளா்ச்சிக்கும் வழிகாட்டும். பெண்கள் தொழில் முனைவோா்களாக உயா்வதற்கு குறைந்தபட்சம் ஒரு கைத் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய சமுதாயத்தில் கைப்பேசியின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆனாலும் கைப்பேசிகளை சாா்ந்திருப்பதை தவிா்த்து, கல்வியின் மூலம் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

இளநிலைப் பிரிவில் 403 மாணவிகள், முதுநிலைப் பிரிவில் 72 மாணவிகள் என மொத்தம் 475 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மேலும், அன்னை தெரசா மகளிா் பல்கலை. அளவில் முதல், 2-ஆம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில் போராசிரியா்கள், மாணவிகளின் பெற்றோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.