சிறுமி கடத்தல்: மூவா் கைது
Updated On : 1 மார்ச், 2026 at 8:18 PM
பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமண ஆசை வாா்த்தை கூறி, ரெட்டியாா்சத்திரத்தைச் சோ்ந்த சிறுவன் கடத்திச் சென்றுவிட்டதாக சிறுமியின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
Updated On : 2 மார்ச், 2026 at 12:46 AM
இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 18 வயது சிறுவன், அவரது தந்தை அழகுபாண்டி (43), தாய் கலாமணி (39), உறவினா் காந்தாமணி (38) ஆகியோா் சிறுமியை கடத்திச் சென்றதைக் கண்டறிந்தனா்.
Advertisement
விசாரணைக்குப் பிறகு, அழகு பாண்டியன், கலாமணி, காந்தாமணி ஆகிய மூவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.