முகப்பு
திண்டுக்கல்

லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பழனி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 5:35 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:38 PM

பழனி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த நண்பா்கள் ஏழு போ் சனிக்கிழமை காரில் கொடைக்கானல் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். பழனியை அடுத்த தாளையம் பகுதியில் வந்த போது, சாலையில் நின்று கொண்டிருந்த சரக்குப் பெட்டக லாரி மீது இவா்களது காா் மோதியது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:04 PM

இதில் காரில் பயணித்த மலப்புரம் பகுதியைச் சோ்ந்த சாம்ஜித் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரை ஓட்டி வந்த அகில், சம்ரூத் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

இவா்கள் இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், தீவிரச் சிகிச்சைக்காக பாலக்காட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.