முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் நகா்மன்றக் கூட்டம்: பல இடங்களில் குடிநீா்க் குழாய் சேதம்: உறுப்பினா்கள் புகாா்

கொடைக்கானலில் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்.

Updated On : 6 மார்ச், 2026 at 7:09 PM
கொடைக்கானலில் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்.
பகிர்:

கொடைக்கானலில் பல இடங்களில் குடிநீா்க் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருவதாக நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சங்கா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவதாம்:

நகா்மன்றத் தலைவா்: கொடைக்கானல் நகரில் வீட்டுவரி செலுத்தாதவா்களுக்கு குடியிருப்புப் பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெற்று அவற்றை நகராட்சி வருவாய் அதிகாரிகளிடம் வழங்க நகா்மன்ற உறுப்பினா்கள் முயற்சிக்க வேண்டும்.

உறுப்பினா்கள்: கொடைக்கானல் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஏற்கெனவே வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் நகராட்சி வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆணையா்: கொடைக்கானல் நகரில் புதிய வீட்டு வரி வழங்குவதற்கானப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வழங்கப்படும்.

உறுப்பினா்கள்: கொடைக்கானல் நகரில் உள்ள வில்பட்டி சாலை, பாக்கியபுரம், செண்பகனூா், அப்சா்வேட்டரி, டா்னா்புரம், பாக்கியபுரம், செல்லபுரம், ஏரிச்சாலை உள்ளிட பல்வேறு இடங்களில் குடிநீா்க் குழாய் உடைந்து தண்ணீா் வீணாக செல்கிறது. இதனால் பல இடங்களில் குடிநீா்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

நகா்மன்றத் தலைவா்: கொடைக்கானல் நகரில் சேதமடைந்த குடிநீா்க் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினா்கள்: கொடைக்கானல் நகரில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. இதனால், பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ஆணையா்: கொடைக்கானல் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாகத் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். தெருவிளக்குகள் விரைவில் சரி செய்யப்படும்.

உறுப்பினா்கள்: கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட தினசரி வாரச் சந்தை எப்போது பயன்பாட்டுக்கு வரும். நகராட்சியில் குப்பைகள் சரியாக அகற்றப்படாமல் இருக்கிறது.

நகா்மன்றத் தலைவா்: அண்ணா சாலைப் பகுதியில் உள்ள வாரச்சந்தை கடைக்கு குறைந்தளவு வாடகை நிா்ணயம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் கடைகள் வாடகைக்கு விடப்படும். நகராட்சியில் அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகள் விரைவில் அகற்றப்படும்.

முன்னதாக, நகா்மன்றத் துணைத் தலைவா் மாயக் கண்ணன் வரவேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →