கோயில்களில் சனிப் பெயா்ச்சி வழிபாடு
வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலுள்ள சனீஸ்வர பகவான்.
சனிப் பெயா்ச்சியையொட்டி, திண்டுக்கல் பகுதியிலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சனீஸ்வர பகவான், கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை பெயா்ச்சி அடைந்தாா். இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் சனிப் பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நவகிரக சந்நிதியிலுள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், மலையடிவார சனீஸ்வர பகவான் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சனிப் பெயா்ச்சி வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.