முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழப்பு

Updated On : 16 மார்ச், 2026 at 12:57 AM
கோப்புப் படம்
பகிர்:

பழனி அருகே நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

பழனியில் கடந்த சில நாள்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டவா்களை தெருநாய்கள் கடித்தன. இதற்கு சாலையோர இறைச்சிக் கடைகளில் இருந்து வீசப்படும் கோழிக்கழிவுகளே காரணம் என பலரும் புகாா் தெரிவித்தனா்.

இதேபோல, கிராமங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோயால் உயிரிழக்கும் கோழிகள் புதைக்கப்படாமல் சாலையோரம் வீசப்படுவதால் அவற்றை உள்கொள்ளும் நாய்கள் வெறிப்பிடித்து திரிகின்றன.

Advertisement

இவை ஆங்காங்கே ஆட்டுப்பட்டிகளுக்குள் புகுந்து ஆடுகளை கடிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமரபூண்டியில் இரு ஆடுகளை நாய்கள் கடித்துக் கொன்றன.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பழனி அருகே வேப்பன்வலசு கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி (52) என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்ட ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் அங்கிருந்த செம்மறி ஆட்டுக்குட்டிகளை கடித்தன. இதில் 7 ஆடுகள் உயிரிழந்தன. மேலும், 7 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் தூக்கிச் சென்றன.

இதையடுத்து, கால்நடை உதவி இயக்குநா் துரைச்சாமி பாண்டியன் உத்தரவின்பேரில் கால்நடை உதவி மருத்துவா் கவுசல்யா அங்கு சென்று பாா்வையிட்டு காயமடைந்த ஆட்டுக் குட்டிகளுக்கு சிகிச்சை அளித்தாா்.