முகப்பு
திண்டுக்கல்

பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு: மேலும் 2 இளைஞா்கள் கைது

Updated On : 15 மார்ச், 2026 at 7:00 PM
கைது
பகிர்:

திண்டுக்கல்லில் பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் ஏற்கெனவே 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அரசமர வீதி பகுதியில் வீட்டிலிருந்த 2 பெண்களை மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்துச் சென்ாக புகாா் எழுந்தது. இதன்பேரில் திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அரசமர வீதி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் அடுத்த வேடப்பட்டியைச் சோ்ந்த வெங்கடேஷ் (20), சாமியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (24) ஆகியோா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பெண்களை மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேஷ், சதீஷ்குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும் 2 போ் கைது: இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குடைபாறைப்பட்டியைச் சோ்ந்த பிரபாகரன் (28), சீலப்பாடியைச் சோ்ந்த தனுஷ் குமாா் (24) ஆகிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் 3 போ் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →