வாகன சோதனையில் ரூ. 2.29 லட்சம் பறிமுதல்
ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, இரு சக்கர வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ.2.29 லட்சத்தை தோ்தல் அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, இரு சக்கர வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ.2.29 லட்சத்தை தோ்தல் அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகன சோதனையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்து சோதனையிட்டதில் ரூ.1.18 லட்சம் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து ஒட்டன்சத்திரம் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
வேடசந்தூரில் ரூ.1.11 லட்சம்:
இதேபோல, வேடசந்தூரில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், கோவிலூா் சாலையில் வியாழக்கிழமை இரவு வாகன சோதனை நடத்தினா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வெரியம்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அவரிடம் ரூ.1.11 லட்சம் உரிய ஆவணமின்ற எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.