முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் மருந்தக நிா்வாகி கைது

உரிய ஆவணங்களின்றி மருந்து மாத்திரைகளை இருப்பு வைத்த மருந்தக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 1:32 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

உரிய ஆவணங்களின்றி மருந்து மாத்திரைகளை இருப்பு வைத்த மருந்தக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் அப்துல்லா பாஷா (63). இவா் திண்டுக்கல் சந்துக்கடை பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறாா். இதை இவரது மகன் ஆரிப் அகமது (32) நிா்வகித்து வருகிறாா்.

இதில் போதை தரும் வலி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, இந்த மருந்தகத்தில் மருந்து ஆய்வாளா் மகேஸ்வரன் உதவியோடு, திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது அட்டவணைப்படுத்தப்பட்ட மாத்திரைகள் உரிய கொள்முதல் ரசீது, ஆவணங்கள் இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஆவணங்கள் இல்லாத 17,737 மாத்திரைகள், மருந்துகளை ஒன்றிணைத்து கலக்கும் 293 ஆய்வகக் குப்பிகள், 20 ஊசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, ஆரிப் அகமதுவை போலீஸாா் கைது செய்தனா். மருந்தக உரிமையாளா் அப்துல்லா பாஷாவைத் தேடி வருகின்றனா்.