மதுரை

பைக் மீது மினி லாரி மோதி பிளஸ் 2 மாணவர் சாவு

DIN

அழகர்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதியதில், பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். 
மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் யோகேஷ் (17) மற்றும்  எல்லீஸ் நகரைச் சேர்ந்த வீரக்குமார் மகன் செந்தில்குமார் (13). இவர்கள் இருவரும் அ.வல்லாளபட்டியில் சண்டை சேவல் வாங்குவதற்காக வந்துவிட்டு, மீண்டும் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வல்லாளபட்டி அருகே மினி லாரி மோதியதில், யோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த செந்தில்குமார், மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலவளவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT