முகப்பு
மதுரை

செம்பட்டி அருகே அரசுப் பேருந்துகள் மோதல்: சிறுமி உள்பட 2 பேர் சாவு

திண்டுக்கல் மாவட்டம்  செம்பட்டி அடுத்துள்ள சித்தையன்கோட்டை  பகுதியில்  2 அரசுப் பேருந்துகள்

Updated On : 5 நவம்பர் 2018, 8:04 am IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம்  செம்பட்டி அடுத்துள்ள சித்தையன்கோட்டை  பகுதியில்  2 அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி உள்பட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்தனர்.
 தேனியிலிருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும், திருப்பூரிலிருந்து  தேனிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அடுத்துள்ள  வீரசிக்கம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை  மோதி விபத்துக்குள்ளாகின. 
இதில், பழனி நோக்கி வந்த அரசு பேருந்து,ஓட்டுநர் இருக்கைக்கு  பின்னால் பலத்த சேதமடைந்தது. இதில் அப்பேருந்தில் பயணித்த, தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த தெய்வநாதன் மகள் ருத்ரா(6) மற்றும்  அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பவளக்கொடி, அமராவதி, விஜயராணி உள்பட 18 பேர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பவளக்கொடி  என்பவர்  தீவிர சிகிச்சைக்காக  மதுரை அரசு  மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். விபத்து குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments