மதுரை

உசிலம்பட்டி அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

DIN

உசிலம்பட்டி அருகே குடிநீர் சீராக   விநியோகிக்கவில்லை எனக் கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது  குறித்து  புகார் அளித்தும்  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, குடிநீர் சீராக வழங்கக் கோரி உசிலம்பட்டி -திருமங்கலம் பிரதான  சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்து வந்த சிந்துபட்டி போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு  வார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT