மதுரை

மாநகராட்சி குறை தீா் முகாம்: 53 மனுக்கள் ஏற்பு

DIN

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 1-இல் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் இருந்து 53 மனுக்கள் பெறப்பட்டன.

மதுரை மாநகராட்சி மண்டலம் 1-இல் சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆணையா் ச.விசாகன் தலைமை வகித்தாா். இதில் குடிநீா், பாதாளச் சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, சொத்து வரி பெயா் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 53 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆணையா் மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும் கடந்த வாரம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

முகாமில் துணை ஆணையா் வி.நாகஜோதி மற்றும் உதவி ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT